Wednesday, 15 February 2012

நீ தானே எந்தன் பொன் வசந்தம்....

வைரமுத்துவின் வைர வரிகளுக்கும்..... இளையராஜாவின் இன்னிசை இசையும்....

இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் பட்டியலில் இணைந்துவிட்டது......

-----------------------------------------------------------


நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

ஆஹா...நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் விசும் மொழிகளில் பிறையும்
பௌர்னமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை
வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல்
கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என்னாளும்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்



பார்க்க : http://www.youtube.com/watch?v=J-cmHwanJ3w

--
SARAVANAN SHANMUGAM

No comments:

Post a Comment