Saturday, 15 October 2011

பொன்னை விரும்பும் பூமியிலே...

பொன்னை… என்னை …… கண்ணதாசா, என்ன ஒரு ஒப்பிடும் அறிவு உனக்கு.!!!!!

 

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

 

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே(2)

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே

 

(பொன்னை விரும்பும் பூமியிலே)

 

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே

 

(பொன்னை விரும்பும் பூமியிலே)

 

ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)

வாழைக் கன்று அன்னையின் நிழலில்

வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு

உள்ளம் ஒன்றே என்னுயிரே

 

(பொன்னை விரும்பும் பூமியிலே)

 

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: ஆலயமணி

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com
 http://www.techmens.com/kvb

 

Thursday, 13 October 2011

கண்ணாடி நீ கண் ஜாடை......

கண்ணாடி நீ கண் ஜாடை - Kannadi Nee Kann

Rate this song

00

Movie name : மங்காத்தா / Mankatha (2011)

Music : Yuvan Shankar Raja

Singer(s) : S.P.B. Charan, Bhavatharani

Lyrics : Vaali

 

கண்ணாடி நீ கண்ஜாடை நான்..

என் வீடு நீ உன் ஜன்னல் நான்..

என் தேடல் நீ உன் தேவை நான்..

என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

என் பாதி நீ உன் பாதி நான்..

என் ஜீவன் நீ உன் தேகம் நான்

என் கண்கள் நீ உன் வண்ணம் நான்

என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..

 

கண்ணோடு வா நீ ஹே ஹே

மோக தளம் போடு நீ ஹே ஹே

ராஜா இன்று வானோடு மேகங்கள்

தீண்டாமல் தொட்டு செல்ல..

 

என் மேனி நீ உன் ஆடை நான்

என் பேச்சு நீ உன் மேடை நான்

என் பாதை நீ உன் பாதம் நான்

என் தென்றல் நீ உன் வாசம் நான்..

 

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே

உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்

எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்

வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்

உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

 

கண்ணாடி நீ கண்ஜாடை நான்..

என் வீடு நீ உன் ஜன்னல் நான்..

என் தேடல் நீ உன் தேவை நான்..

என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

 

துரம் இலமே உடைந்து போக

பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக

வீரம் கொண்டாடும் கலைஞனாக

ஈரம் மண்மேலே விழுந்து தீயாக

தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

 

என் மேனி நீ உன் ஆடை நான்

என் பேச்சு நீ உன் மேடை நான்

என் பாதை நீ உன் பாதம் நான்

என் தென்றல் நீ உன் வாசம் நான்..

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

Sunday, 9 October 2011

முகில் இனங்கள் அலைகிறதே.....

முத்தான வரிகள்…..

 

முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடிமோ அது மழையோ…..

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

இளமை என்னும் பூங்காற்று....

இளமை என்னும் பூங்காற்று

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

Saturday, 8 October 2011

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்...

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..
(மடை திறந்து..)

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

வானத்தின் மீதே பறந்தாலும்

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ

 


(ரோஜா மலரே ராஜக்குமாரி)

படம்: வீரத்திருமகன்
பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ், சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

நாலாயிர திவ்ய பிரபந்தம்....

இதுவரை அடியேனக்கு தாய் மொழில் எழுத தெரியாது ஏனெனில் பள்ளி காலத்திலிருத்து படித்தது, சேவியில் பருகியது தமிழலே.

இருந்தாலும் நன்று. தமிழ் மிது ஆர்வம் வந்த ஓர் காரணம் நாலாயிர திவ்ய பிரபந்தம். தமிழ் மொழி இலக்கிய, இலக்கணத்துடன் கற்ற வேண்டும் என்றால் இது போன்ற நூல்களை படியுங்கள்! பிறகு சுவைவீர்கள்.

பிரபந்தத்தில் அடியேனக்கு பிடித்தவை மிகவும் அதிகம். சில வெண்பாகள் இதோ….

 

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.

 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

 

2282:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1

 

2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1

 

இன்னும் பல பாடல்கள்……

ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம:

 

-    அடியேன் இராமானுஜதாசன்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணையாவது நம சிவாயவே

 

-          (நான்காம் திருமுறை, 4262)

 

இந்ந வரிகள் அடியேனக்கு பிடிக்க இரு காரணங்கள். ஓன்று, அடியேன் சிங்கையில் தங்கிய சிவன் கோவிலில் சிவ அடியார்களால் சேவியில் கேட்டு கேட்டு இனித்து… இரண்டு…. நான் இந்ந பாடலை மனப்பாடமாக இளங்களையில் படித்து….. பக்தி திறனை பாருங்கள்…. கல், கடல், தெப்பம்… அருமை…

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்

கோபுர வாசலிலே, இந்ந பாடல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. இளையராஜா இசை இனிதாகவும், வரிகள் வண்ணமுடனும் அமைந்துள்ளது…

 

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

உன்னை அறிந்தால்...

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் இந்த வரிகள் மிகவும் என்னை ஈர்த்தது…

 

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும்…..

 

பாடல் : உன்னை அறிந்தால்

 

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்......

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை

என் ஆவி நீயே தேவி

 

இந்த வரிகள் இடம் பெற்ற பாடல் "இராஜ இராஜ சோழன் நான்…."

மிகவும் அருமையாக எழுதியுள்ளார்…….

 

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

எனக்கு பிடித்தவை...

வணக்கம்,

நான் பழைய பாடல்கள் இல்லை….இல்லை…புதிய பாடல்கள் (பழைய பாடல்கள்) என்று சொல்லுங்கள் ஏனெனில் ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது இனிக்கவும், இனிமையாகவும் மற்றும் புதுமையாகவும் இருக்கிறது.

எனக்கு கவிஞர் கண்ணதாசன் வடித்த பாடல்கள் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர் அன்றைக்கு சொன்ன உதாரனங்கள் இன்றைக்கு நிஜமாக உருமாறி இருக்கிறது.

அவர் எழுதிய பாடல்களில் அடியேனுக்கு பிடித்தவை சில:

·         உன்னை அறிந்தால்….

·         சொர்கம் மதுவிலே…

·         பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…

·         அச்சம் என்பது .. மடமையடா..

·         மலர்ந்து மலராத…

இன்னும் பல…….

 

கவிஞர் கண்ணதாசன் மட்டுமின்றி தமிழில் பிடித்தவை பல ஆனால் நானோ படித்தவை சில……

 

நன்றி

 

----

SARAVANAN SHANMUGAM

* shaanmugam [at] gmail.com

* shaanmugam [at] techmens.com

8 http://www.techmens.com/kvb