ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையை நாடுகின்றேன்
நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
No comments:
Post a Comment